top of page

சமூக வலைதள தொடர்புகளுக்கு

  • Facebook Classic
  • Google+ App Icon
  • LinkedIn App Icon
  • Twitter Classic

© KS Kalai

சரியான தப்பு ! 

 

அமைதிக்காக 
ஆர்பாட்டம் செய்வதும் 
சமாதானத்திற்காக 
சண்டைப் பிடிப்பதும் 
முட்டாள்தனம் என்பதை 
அறியாத அறிவே ஆறாம் அறிவு ! 

மூளைச்சலவையில் 
அழுக்கேற்றிக் கொள்கிறது 
அடிப்படைவாதப் போர்வைகள் ! 

முக்கால் பங்கு 
மானுடரின் புத்தியை 
தொற்றிக் கொண்டிருக்கிறது 
கடவுள் என்ற ஃபோபியா! 

மதக் காடுகளில் 
எல்லோரும் 
முயல் பிடிக்கிறார்கள் 
எல்லா முயல்களுக்கும் 
மூன்று கால்கள் ! 

அவனவனுக்கு 
அவனவன் சுத்தம் ! 
அடுத்தவனுக்கு 
அடுத்தவன் அபத்தம் ! 

"U" வளைவில் 
திரும்பிப் போகும் 
நாகரீக யாத்திரை 
கூடிய விரைவில் கண்டுபிடிக்கும் 
நிறைய ஆதாம்கள் ஏவாள்கள் 
வாழ்ந்தார்கள் என்பதை - 
"மதங்களின் கிருபையால்"

bottom of page