top of page

சமூக வலைதள தொடர்புகளுக்கு

  • Facebook Classic
  • Google+ App Icon
  • LinkedIn App Icon
  • Twitter Classic

© KS Kalai

புலம்பல் !

 

 

செய்யவழி ஏதுமில்லை 

துயரவலி அயரவில்லை 

கேடு எங்கள் விரல்களில் ! 

 

உய்யவழி எதுவுமில்லை 

உயரவழி தெரியவில்லை 

நாடு அவர்கள் கைகளில் ! 

== 

சீலைகள் கிழித்து 

தாவணி செய்யும் 

தாய்மார் தவிப்பு யாரறிவார் ? 

 

வேலையை செய்தும் 

எலிக்கறி தின்னும் 

ஏழையின் பசியை யாரறிவார் ? 

 

பட்டங்கள் வென்றும் 

வாழ்வினை இழந்து 

நிற்கின்ற இளைஞர் என்செய்வார் ? 

 

திட்டங்கள் உண்டு 

சட்டங்கள் உண்டு 

விடியலின் திறவுகோல் எங்குண்டு ? 

== 

ஆடி போய் ஆவணி வந்ததும் 

ஆட்டிப்படைக்க- 

பாதைகள் தோறும் சனிவரும் ! 

 

வாடிப் போய் காலணி தொட்டும் 

வாட்டியெடுக்கும்- 

வாதைகள் தானே இனிவரும் ? 

== 

வறுமை ஊஞ்சலாடும் 

வாழ்க்கை ஊசலாடும்- 

இந்த தேர்தலுக்கு...கோவணம் ! 

 

சவால்விட ஆயிரம்பேர் 

சாதிக்க நாதியில்லை- 

அடுத்த தேர்தலுக்கு...அம்மணம் ?

bottom of page