top of page
- எழுத்தால் இளைப்பாற -
கலைப் பூங்கா
பொறப்பட்டு வாடி !
தொப்புள்கொடி அறுத்துகிட்டு
வெளிய வந்ததும் - நாங்க
பொட்டப்புள்ள என்ற சேதி
தெரிய வந்ததும் - எங்கள
கள்ளிப் பால வாயில் ஊத்தி
கொல்லப் பாக்குது - ஒலகம்
கழுத்தறுத்து குப்ப மேட்டில்
தூக்கி வீசுது !
கள்ளிப் பாலு தடைய தாண்டி
பள்ளி போகிறோம் - அங்க
பல்லக்காட்டி வாத்தியாரு
கிள்ளிப் பாக்குறான் - அப்புறம்
மல்லுக்கட்டி கூத்தடிக்க
மெரட்டிப் பாக்குறான் - தடுத்தா
ஊரக்கூட்டி வேறக்கத, வேறபேரு
சூட்டி வைக்கிறான் !
குடும்ப பாரம் சுமக்க நாங்க
வேலைக்குப் போனா - அங்க
உடும்ப போல கங்காணி
சுத்தி திரியுறான் - வெறியா
ஒடம்ப கொஞ்சம் ஒரசி பாக்க
முட்டி மோதுறான் !
வாக்கப்பட்டு போன எடத்தில்
வாட்டி எடுக்குறான் - புருஷன்
கள்ளு கசிப்பு போதயேத்தி
துள்ளி குதிக்கிறான் - தெனமும்
வாலிபத்து பசிய போக்க
எட்டி ஒதைக்கிறான் !
பொம்பளையா பொறந்துப்புட்டா
எத்தன கொடும - இதெல்லாம்
பொறுத்துகிட்டு கிடந்தாத்தான்
பொட்டனு சொல்லும் ! - ஒடனே
பொத்துகிட்டு எழுந்துவாங்கடி
பொம்பளக் கூட்டம் - இந்த
பொல்லாப்புக்கு ஆப்பு வைக்க
பொறப்பட்டு போவோம் !!
bottom of page