top of page

சமூக வலைதள தொடர்புகளுக்கு

  • Facebook Classic
  • Google+ App Icon
  • LinkedIn App Icon
  • Twitter Classic

© KS Kalai

பொறப்பட்டு வாடி !

 

தொப்புள்கொடி அறுத்துகிட்டு 
வெளிய வந்ததும் - நாங்க 
பொட்டப்புள்ள என்ற சேதி 
தெரிய வந்ததும் - எங்கள 
கள்ளிப் பால வாயில் ஊத்தி 
கொல்லப் பாக்குது - ஒலகம் 
கழுத்தறுத்து குப்ப மேட்டில் 
தூக்கி வீசுது ! 

கள்ளிப் பாலு தடைய தாண்டி 
பள்ளி போகிறோம் - அங்க 
பல்லக்காட்டி வாத்தியாரு 
கிள்ளிப் பாக்குறான் - அப்புறம் 
மல்லுக்கட்டி கூத்தடிக்க 
மெரட்டிப் பாக்குறான் - தடுத்தா 
ஊரக்கூட்டி வேறக்கத, வேறபேரு 
சூட்டி வைக்கிறான் ! 

குடும்ப பாரம் சுமக்க நாங்க 
வேலைக்குப் போனா - அங்க 
உடும்ப போல கங்காணி 
சுத்தி திரியுறான் - வெறியா 
ஒடம்ப கொஞ்சம் ஒரசி பாக்க 
முட்டி மோதுறான் ! 

வாக்கப்பட்டு போன எடத்தில் 
வாட்டி எடுக்குறான் - புருஷன் 
கள்ளு கசிப்பு போதயேத்தி 
துள்ளி குதிக்கிறான் - தெனமும் 
வாலிபத்து பசிய போக்க 
எட்டி ஒதைக்கிறான் ! 

பொம்பளையா பொறந்துப்புட்டா 
எத்தன கொடும - இதெல்லாம் 
பொறுத்துகிட்டு கிடந்தாத்தான் 
பொட்டனு சொல்லும் ! - ஒடனே 
பொத்துகிட்டு எழுந்துவாங்கடி 
பொம்பளக் கூட்டம் - இந்த 
பொல்லாப்புக்கு ஆப்பு வைக்க 
பொறப்பட்டு போவோம் !!

bottom of page