top of page
- எழுத்தால் இளைப்பாற -
கலைப் பூங்கா
நெஞ்சுக்குள் நிறைந்தவை !
நெஞ்சுக்குள்ள எங்களுக்கு
நிறைய நிறைய விருப்புண்டு !
அஞ்சிக்கும் பத்துக்கும்
அடிமாடா அலைஞ்சாலும் -
பிஞ்சுக்கு பாலிருக்கா !
கஞ்சுக்கு வழியிருக்கா !
நெஞ்சுக்குள்ள எங்களுக்கு
நிறைய நிறைய நெருப்புண்டு !
நெஞ்சுக்குள்ள எங்களுக்கு
நிறைய நிறைய ஈரமுண்டு !
கஞ்சிக்கு வழியின்றி
கஷ்டத்தில் கிடந்தாலும் -
பிள்ளைங்க படிக்கனும் !
கல்யாணம் முடிக்கனும் !
நெஞ்சுக்குள்ள எங்களுக்கு
நிறைய நிறைய பாரமுண்டு !
நெஞ்சுக்குள்ள எங்களுக்கு
நிறைய நிறைய வீரமுண்டு !
கொத்தடிமை கூட்டமாக
அன்றுமுதல் கிடந்தாலும் -
கெட்டதை அழிக்கனும் !
நல்லதை விதைக்கனும் !
நெஞ்சுக்குள்ள எங்களுக்கும்
நிறைய நிறைய காரமுண்டு !
நெஞ்சுக்குள்ள எங்களுக்கு
நிறைய நிறைய பொறுப்புண்டு !
பள்ளிகூடம் போகாம
கொள்ளிகாடு போனாலும் -
நல்லாட்சி நடக்கனும் !
மனசாட்சி நிலைக்கனும் !
நெஞ்சுக்குள்ள எங்களுக்கு
நிறைய நிறைய வெறுப்புண்டு !
bottom of page