top of page

சமூக வலைதள தொடர்புகளுக்கு

  • Facebook Classic
  • Google+ App Icon
  • LinkedIn App Icon
  • Twitter Classic

© KS Kalai

என்னமோ ஏதோ 

 

பானையில் இல்லா 
சோற்றை அள்ளி அள்ளி 
போடுகிறது அகப்பை 
முகத்துதியாய், முறுவலாய் ! 

சொற்பமும் ஈரமில்லா 
பாறைகளில் மட்டுமே 
வேரூன்றி வளர்கின்றன 
சுயநலச் செடிகள் ! 
வறட்சியின் 
விலாசமும் விசாலமும் 
உள்ளூர பரவிக் கிடக்கும் ! 

சுளைகளைப் போர்த்தி 
மறைந்துக் கிடக்கும் 
புலப்படாத விடமேற்றிய 
முட்களின் முகவரி 
இன்சொல் உதடுகளில் 
தோழமைக் கீதம் பாடும் ! 

ஈரலிப்பு நிலத்தில் 
மலட்டு விதைகளுடன் 
கிளை பரப்பி நிற்கும் 
வார்த்தை விருட்சங்கள் 
வாழ்த்து துதிகளாய் ! 

கலப்படம் செய்யப்பட்ட 
உணர்ச்சிகளின் உணர்வுகளின் 
விசமத்தில் விஷமேறிய 
நரம்புகள் வெடித்து 
விடுதலைக்கு இழுத்துச் செல்ல.... 

தாவி தாவி 
தடுக்கி விழுந்த குரங்குகள் 
சொடுக்கு விட்டு 
சொல்லிச் செல்லும் 
அவனோ மேதாவி என்று ! 

கூவி கூவி அழைத்து 
குரல்கட்டிய குயில்கள் 
உரத்து உரத்து 
குரைத்துச் சொல்லும் 
அவனோ பாவி என்று ! 

பழகிப் போன பாதையில் 
விரும்பிப் போக முடியாமல் 
திரும்பிப் போக தெரியாமல் 
வெரித்து, மரித்து, எரித்து, சிரித்து 
தரித்து கிடக்கும் விரக்தி !

bottom of page