top of page

சமூக வலைதள தொடர்புகளுக்கு

  • Facebook Classic
  • Google+ App Icon
  • LinkedIn App Icon
  • Twitter Classic

© KS Kalai

பொல்லாப்பு !

 

ஏட்டுச் சுரக்காய் எளிதில் கிடைக்கும் 
இந்தச் சந்தைகளில் - வெறும் 
கேட்டுச் சரக்காய் பரவிக் கிடக்கும் 
மந்தச் சிந்தைகளில் ! 

விதையே என்பார் விளையும் என்பார் 
வீரியம் இருக்காது - பொய் 
கதையே சொல்லி காலம் தள்ளுவார் 
காரியம் நடக்காது ! 

கவிதை என்பார் கதைகள் என்பார் 
கருத்தே இருக்காது - ஒரு 
கழுதைக் கூட கடிக்கா காகிதம் 
பொறுத்தே சகிக்காது ! 

கூனிகள் சகுனிகள் கூடியே ஆடினும் 
மெய்ஞானம் வீழாது - பொய் 
ஞானிகள் ஆயிரம் கூத்துகள் செய்யினும் 
அஞ்ஞானம் வாழாது ! 

வில்லுக்கு துணியும் வீரம் பேசுவார் 
நேருக்கு வாராது ! - நற் 
சொல்லுக்குப் பயந்து சூழ்ச்சிகள் செய்யும் 
கோழைக்கு வாழ்வேது ?

bottom of page