top of page

சமூக வலைதள தொடர்புகளுக்கு

  • Facebook Classic
  • Google+ App Icon
  • LinkedIn App Icon
  • Twitter Classic

© KS Kalai

கோழைத் துரோகிக்கு... 

தமிழினை தலையில் வைத்தேன் - நற் 

தரத்தினை சகத்தினில் கேட்டேன் ! 
உமிழ்வதே தொழிலென கொண்ட - சில 
ஊர்வன நெளிவதும் கண்டேன் ! 

உடலினை விற்றுப் பிழைக்க - இந்த 
ஊர்விட்டு ஓடிய பூச்சிகள் 
விடமென வார்த்தைகள் வீசி - என் 
விடியலை அழிக்குமாம்! சிரிப்பு ! 

கொள்ளியில் பொசுக்கி என்னை - நீ 
கொல்வது தானோ வீரம் ? 
எள்ளியே சிரிக்குதென் நெஞ்சு - ஏன் 
என்தமிழ் வாட்டுதோ உன்னை ? 

கோரத்தை உனக்குள் வைத்தே - என் 
தாரத்தை தூற்றிய நாயே ! 
வீரத்தை என்னிடம் காட்டு - உனை 
வேரோடு அழிப்பேன் நானே ! 

நேருக்கு நேரெனை நோக்க - உன் 
நெஞ்சினில் தைரியம் உண்டா ? 
போருக்கு வந்துநில் என்றால்- நீ 
போர்வைக்குள் மறைவது வெட்கம் ! 

வீரமுன் அகத்தினில் உண்டா - என் 
வீறுதமிழ் முன்னே வாடா(டி) ! 
சூரத்தனம் எல்லாம் பொய்யோ? - தூ... 
ஊறுஉனை கொல்வேன் போடா(டி) ! 

எந்தையும் தாயும் எனக்கு - தந்த 
இவ்வுயிர் அழிந்திட முன்னம் 
சிந்தையில் சீர்த்தமிழ் ஏற்றி - அந்த 
சிறுமைகள் அழிப்பது திண்ணம் ! 

கூற்றனை அழிக்கும் கூற்று - தினம் 
ஊற்றென பெருகும் என்னில் ! 
தூற்றனைக் கொளுத்திப் பொசுக்கி-யான் 
மாற்றங்கள் செய்வேன் பாரீர் ! 

bottom of page