top of page

சமூக வலைதள தொடர்புகளுக்கு

  • Facebook Classic
  • Google+ App Icon
  • LinkedIn App Icon
  • Twitter Classic

© KS Kalai

 

உழவு போற்று !

 

மலைமுகட்டில் பனியிறங்கும் வேளை - கிழக்கில் 
தலை துவட்டிப் பரிதிவரும் காலை - 
முகிலெடுத்து முகம்துடைக்கும் சோலை - உழவன்
முனைப்போடு தொடங்கிடுவான் வேலை ! 

கோவணத்தைக் கட்டிக்கொண்ட உழவன்- வயது 
ஏழுபத்து தாண்டிவிட்ட கிழவன் ! 
ஆவணமாய் வயல் எழுதும் மறவன் - அவனே 
அண்டமகிலம் அத்தனைக்கும் அரசன் ! 

உடல்முழுதும் பூசி நிற்பான் சேறு-அவன் 
உள்ளத்திலே இருப்பதில்லை ஊறு ! 
சளைக்காமல் ஓட்டிடுவான் ஏரு - ஊருக்கு 
களைக்காமல் ஊட்டிடுவான் சோறு ! 

கடலாக திரண்டோடும் வேர்வை- அவன் 
கண்டதில்லை ஒருபோதும் சோர்வை ! 
வறுமையவன் போர்த்திக் கொள்ளும் போர்வை 
அதை- கிழித்தெறிய அரசிற்கில்லை பார்வை ! 
=== 
பச்சைசேலை கட்டிக் கொண்ட பூமி -அதில் 
பாடுபடும் மனிதன் தானே சாமி ? 
உழவனுக்கு இணையிங்கு ஏது - அவனை 
போற்றஒரு வார்த்தைக் கிடை யாது !

 

bottom of page