top of page

சமூக வலைதள தொடர்புகளுக்கு

  • Facebook Classic
  • Google+ App Icon
  • LinkedIn App Icon
  • Twitter Classic

© KS Kalai

துடிப்படங்கும் பிரபஞ்சம் !

 

சுவாதியின் இடத்தில் 
ஒரு குழந்தையோ 
ஒரு கிழவியோ 
ஒரு கர்ப்பிணியோ 
ஒரு விதவையோ 
ஒரு திருடனோ 
ஒரு குருடனோ 

ஏன்... 

ஒரு பாத்திமாவோ 
ஒரு விக்டோரியாவோ 
இருந்திருந்தால் கூட 
சிதறடித்துப் போயிருக்கும் 
அந்த வெடி குண்டு ! 

இப்படி தான் 
ஒவ்வொரு முறையும் 
வெடி குண்டு 
எதுவும் யாரும் 
எனக்குச் சமமே என்று 
சமத்துவம் 
போதித்துக் கொண்டிருக்கிறது ! 

மனிதத்தைக் கடித்து 
மதங்கள் துப்பிச் செல்லும் 
கோரத்தின் தேகமே 
வடியும் குருதியாய் 
காட்சி தருகிறது 
எங்கேயும் எப்போதும் ! 

வெண் புறாவுக்கு 
ஆசைப்பட்டு காத்திருக்கும் 
வானத்தில் - பசியாறிப் 
பறந்துக் கொண்டிருக்கிறது 
பருந்துக் கூட்டம் ! 

இன்னும் லட்சக் கணக்கில் 
கேடயங்களாகவும் 
பகடைக் காய்களாகவும் 
அப்பாவிகள் இருக்கிறார்கள் ! 

லட்சங்கள் சொச்சமாய் மாறி 
மிச்சமின்றிப் போகும் நாளில் 
யுத்தங்கள் ஓய்வெடுக்கும் 
பயங்கரவாதம் துயில் கொள்ளும் ! 

அன்றைக்கு.... 
வெடிகுண்டின் பிடியில் 
துகிலுரிந்து துடித்துக் கிடக்கும் 
பிரபஞ்சத்தின் உயிர் 
துடிப்படங்கிச் செத்துக் கிடக்கும் 

=========

(2014 மேதினத்தன்று சென்னை ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பின் போது எழுதப் பட்ட கவிதை. இந்த குண்டுவெடிப்பில் சுவாதி என்ற இளம் பெண் கொலை செய்யப் பட்டார்)

bottom of page