top of page

சமூக வலைதள தொடர்புகளுக்கு

  • Facebook Classic
  • Google+ App Icon
  • LinkedIn App Icon
  • Twitter Classic

© KS Kalai

வாழா வாழ்வு !

 

ஏதுமில்லை ஏதுமில்லை 
இந்த வாழ்வில் ஏதுமில்லை ! 
சூதுமில்லை வாதுமில்லை 
சொத்து சுகம் போதவில்லை ! 

காசுபணம் இல்லையென்றால் 
கணக்கெடுக்க நாதியில்லை ! 
சொத்துசுகம் சேர்த்தபோதும் 
சொந்தவாழ்வில் சோதியில்லை ! 

அந்தி வானம் கண்டதில்லை ! 
ஆற்றங்கரைப் போனதில்லை! 
வாசல் வந்து நின்றதில்லை 
வாசப் பூக்கள் ரசித்ததில்லை ! 

பிள்ளை முகம் தொட்டதில்லை 
ஆசை முத்தம் பெற்றதில்லை ! 
மனைவி மடி சாய்ந்ததில்லை 
மரணம் வரை ஓய்ந்ததில்லை ! 

அயலான் நலம் கேட்பதில்லை 
அவனும் முகம் பார்ப்பதில்லை ! 
அவசரமாய்ச் செத்துப் போனால் 
அள்ளிப் போக யாருமில்லை ! 

ஓடி ஓடி உழைத்துப் போவார் 
தேடி தேடி களைத்துப் போவார் 
ஆயுள் முடிந்துப் போகும் நாளில் 
ஆறடியே கொண்டு போவார் ! 

வாய்க்கரிசி போடும்வரை 
தேவையிங்கு ஓய்வதில்லை ! 
வாழ்க்கை முடிந்து போகும்வரை 
யாருமிங்கு வாழ்வதில்லை !

 

bottom of page